கணவன், மனைவி உயிருடன் தீயில் கருகி சாவு.. (வீடியோ)

16080பார்த்தது
உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்டோய் பகுதியில் நேற்று (மே 24) பயங்கர சாலை விபத்து நடந்தது. ராதேபூர்வா பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் (32) என்பவர் தனது மனைவி கீர்த்தி (30) பிஏ தேர்வு முடித்துவிட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது இவர்கள் சென்ற காரின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது. இந்த கார் மணிக்கு 100 கிமீ வேகத்தில் சென்றதால் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த வேப்ப மரத்தில் மோதியது. மரத்தில் மோதியவுடன் தீ மளமளவென பரவி வெளியே வர வழியின்றி இருவரும் உயிருடன் எரிந்தனர். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி