ஆகாஷ்-என்ஜி ஏவுகணை சோதனை வெற்றி

60பார்த்தது
ஆகாஷ்-என்ஜி ஏவுகணை சோதனை வெற்றி
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'ஆகாஷ்-என்ஜி' என்ற ஏவுகணையை வெள்ளிக்கிழமை வெற்றிகரமாகச் சோதனை செய்தது. ஒடிசாவில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக அந்த அமைப்பின் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஏவுகணை குறைந்த உயரத்தில் இருந்த அதிவேக ஆளில்லா வான்வழி வாகன இலக்கை வெற்றிகரமாக முறியடித்தது. பல்வேறு உள்நாட்டு கருவிகளின் அடிப்படையில் ஏவுகணையின் செயல்திறன் மற்றும் திறன் மதிப்பிடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி