தலையில் மிளகாய் கரைசல் ஊற்றி அபிஷேகம் (Video)

57பார்த்தது
புதுச்சேரியில் உள்ள வர்ணமுத்து மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் 8 நாட்கள் நடைபெறும் திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை துவங்கியது. இதில் 5ம் நாள் முக்கிய திருவிழாவில் அம்மனுக்கு 108 அபிஷேகம் நேற்று (மே 26) நடந்தது. இதன்போது 3 பேர் அங்காளம்மன், வர்ணமுத்து மாரியம்மன், இளங்காளியம்மன் ஆகியோர்களாக பாவிக்கப்பட்டு 108 அபிஷேகப் பொருட்கள் அவர்களின் தலையில் போடப்பட்டு தண்ணீர் ஊற்றப்பட்டது. கடைசியாக பக்தர்களின் கையால் அரைக்கப்பட்ட மிளகாய் தூள் கரைசல் தலையில் ஊற்றப்பட்டது.

நன்றி: Dinamani

தொடர்புடைய செய்தி