1964, மே 26 புவனேஷ்வர் சென்றிருந்தபோது நேருவுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. அவரை ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்திய நிலையில். அவசரமாக டெல்லி திரும்பினார். மே 27ம் தேதி காலை 6:30 மணி அளவில் அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டது. இந்திராகாந்தியின் அவசர அழைப்பின் பெயரில் வந்த மருத்துவர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். 8 மணி நேரம் கோமாவில் இருந்த அவர் 2:05 மணிக்கு காலமானதாக வானொலியில் அறிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் நேருவின் இல்லத்தில் குவிந்தனர். மே 29 அவரது இறுதி சடங்குகள் நடைபெற்றது.