பிரதமர் மோடி கன்னியாகுமரியில் இரண்டாவது நாளாக தனது தியானத்தை தொடர்கிறார். நேற்று(மே 31) மாலை கன்னியாகுமரிக்கு வருகை தந்த அவர், முதலில் பகவதி அம்மன் கோயிலில் வழிபாடு நடத்தினார். பின்னர் விவேகானந்தர் மண்டபத்திற்கு சென்ற அவர், தனது தியானத்தை தொடங்கினார். நேற்று பட்டு வேஷ்டி, சட்டையில் வந்திருந்த அவர், இன்று காவி உடையில் அமர்ந்து தியானம் செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகியிருக்கிறது. இன்று(மே 31) மாலை தனது தியானத்தை முடித்துக் கொண்டு மீண்டும் டெல்லிக்கு திரும்புகிறார்.