ஓடும் ரயிலில் பெண் மருத்துவரை கடித்த பாம்பு

59பார்த்தது
ஓடும் ரயிலில் பெண் மருத்துவரை கடித்த பாம்பு
கேரளாவின் நீலம்பூரில் இருந்து இன்று (மே 28) சென்றுக் கொண்டிருந்த ரயிலில் ஆயுர்வேத மருத்துவரான காயத்ரி (25) பயணித்த போது அவர் காலில் பாம்பு கடித்தது. இதனால் அலறிய அவர் அடுத்த ரயில் நிலையத்தில் சக பயணிகள் உதவியுடன் கீழே இறக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அருகில் இருந்தவர்கள் கூறும்போது, “காயத்ரியின் காலில் பாம்பு கடித்ததற்கான அடையாளம் காணப்பட்டது” என்றனர். இதனிடையில் ரயிலில் வெகுநேரம் தேடியும் பாம்பு கிடைக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி