சேலம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு ஆத்தூர் மாவட்டம் தனியாக உதயமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பு நாளை மறுநாள் ஜன.26ஆம் தேதி குடியரசு தினத்தன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சேலம், எடப்பாடி, மேட்டூர், ஓமலூர் சங்ககிரி ஆகிய 5 தாலுகாக்களுடன் சேலம் மாவட்டமாகவும், ஆத்தூர், வாழப்பாடி, ஏற்காடு, கங்கவள்ளி ஆகிய 5 தாலுகாக்களுடன் ஆத்தூர் மாவட்டமாகவும் பிரிக்கப்படவுள்ளன. தமிழகத்தில் தற்போது 38 மாவட்டங்கள் உள்ளன.