டெல்லியில், பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். டெல்லி ஷாஹ்தாரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாலியல் தொழில் ஜோராக நடப்பதாக போலீஸ்க்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து, பாலியல் தொழில் நடத்திவந்த தரகர் கரண் சத்தா, அவரது கூட்டாளியான பெண் மற்றும் பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்தப்பட்ட 5 பெண்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.