சிபிஐ, சிபிஎம், மதிமுகவுடன் இன்று 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை

59பார்த்தது
சிபிஐ, சிபிஎம், மதிமுகவுடன் இன்று 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை
இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் மதிமுக நிர்வாகிகளுடன் திமுக தொகுதிப் பங்கீட்டுக்குழு இன்று 3ஆம் கட்டமாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக கூட்டணியில் ஐயூஎம்எல் கட்சிக்கு ஒரு ராமநாதபுரம் தொகுதியும், கொமதேக கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ், விசிக, மதிமுக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளுடன் இதுவரை உடன்பாடு எட்டப்படவில்லை. இந்த கட்சிகள் ஏற்கனவே போட்டியிட்டதை விட கூடுதல் தொகுதிகள் கேட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும், கமல்ஹாசனின் மநீம கட்சியும் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி