திருச்செந்தூர் கோவிலில் ரூ.4.64 கோடி உண்டியல் வருவாய்

76பார்த்தது
திருச்செந்தூர் கோவிலில் ரூ.4.64 கோடி உண்டியல் வருவாய்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் வருவாய் மாதந்தோறும் எண்ணப்படுகிறது. அதன்படி திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை உண்டியல் எண்ணிக்கை அறங்காவலர் குழுத்தலைவா் ரா.அருள்முருகன் தலைமையில் திருக்கோவில் வசந்த மண்டபத்தில் நடைபெற்றது. உண்டியல் எண்ணிக்கையில், ரூ.4 கோடியே 64 லட்சத்து 92 ஆயிரத்து 542, தங்கம் 2,390 கிராம், வெள்ளி 51,000 கிராம், பித்தளை 2,22,000 கிராம், செம்பு 29,000 கிராம், தகரம் 5,500 கிராம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் 727-ம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தது தெரியவந்தது.

தொடர்புடைய செய்தி