திமுக - விசிக தொகுதி பங்கீடு இன்று முடிவடைய வாய்ப்பு

72பார்த்தது
திமுக - விசிக தொகுதி பங்கீடு இன்று முடிவடைய வாய்ப்பு
திமுகவுடனான தொகுதி பங்கீடு இன்று முடிவடையும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், விழுப்புரம் தொகுதி எம்.பி.யுமான ரவிக்குமார் தெரிவித்துள்ளார். அரியலூர் ஜெயங்கொண்டத்தில் நேற்று, விசிக தேர்தல் முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரவிக்குமார், திருமாவளவன் மீண்டும் சிதம்பரத்தில் போட்டியிடவுள்ளார். திமுக உடனான விசிகவின் தொகுதி பங்கீடு வியாழக்கிழமை முடிவடையும் என நினைக்கிறேன். தேர்தலின் போது திருமாவளவனின் நாடாளுமன்ற பணிகள் செய்த சாதனைகளை எடுத்துக் கூறி ஒரு லட்சம் வாக்கிற்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்ற நோக்கில் உள்ளோம் என்றார்.

தொடர்புடைய செய்தி