ஆத்தூரில் ரூ.2.93 கோடிக்கு மஞ்சள் வர்த்தகம்

81பார்த்தது
ஆத்தூரில் ரூ.2.93 கோடிக்கு மஞ்சள் வர்த்தகம்
ஆத்தூரில் ரூ.2.93 கோடிக்கு மஞ்சள் வர்த்தகம் நடைபெற்றது. சேலம் மாவட்டம் ஆத்தூர் புதுப்பேட்டை வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று மஞ்சள் ஏலம் நடைபெற்றது. பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட 2,923 மஞ்சள் மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இதில் குறைந்தபட்சமாக உருண்டை மஞ்சள் ரூ.14,189-க்கும், அதிகபட்சமாக பனங்காலி மஞ்சள் ரூ.30,913-க்கும் விலை போனது. மொத்தம் ரூ.2 கோடியே 93 லட்சத்திற்கு மஞ்சள் வர்த்தகம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி