விஷச்சாராய பலி எண்ணிக்கை 61 ஆக உயர்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விஷச்சாராயம் குடித்து, மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டிருந்த ஏசுதாஸ் (35) என்பவர் உயிரிழந்தார். இதன் மூலம் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 20 பேர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், 3 பேர் உயிரிழந்துள்ளனர். 6 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். உடல்நலம் பாதிக்கப்பட்ட 10 பேர் புதுச்சேரி ஜிப்மரில் தொடர் சிகிச்சையில் உள்ளனர். அதே போல், 140-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி