திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது: - திமுகவை சேர்ந்த ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி தலையின் மீது தற்போது கத்தி தொங்கி கொண்டு உள்ளது. எந்த நேரத்தில் எந்த தீர்ப்பு வரும் என்று தெரியாது. இவர்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் நிரபராதி என்று தீர்ப்பு வழங்கினர். ஒரு நீதிபதியே பெரியசாமி, பொன்முடி, நேரு உள்ளிட்ட 10, 13 தமிழக அமைச்சர்கள் மீது லஞ்சம் வாங்கி சொத்து சேர்த்திருக்கிறார்கள் என்று விடுதலை செய்த அத்தனை அமைச்சர்கள் மீதான வழக்குகளை தோண்டி துருவி எடுத்து விசாரணை செய்து வருகின்றார்.
போதைப் பொருட்கள் கஞ்சாவுக்கு துணை போகும் முதலமைச்சராக ஐயா ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். அதனால் அவர் யோக்கியன் என்று சொல்ல முடியாது என்று என்று பேசினார். ஆகவே பொதுமக்கள் அனைவரும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெற செய்ய வேண்டும் என வாக்குகளை சேகரித்தார்.