பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயின்று வரும் வெண்மான்கொண்டான் கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் மகன் வைசாந்த் (7), யுகேஜி பயிலும் வெங்கடேசன் மகள் வர்ணிஷா(5), 5 ம் வகுப்பு பயிலும் ஞானசேகரன் மகன் ஹேம்நாத் (9), தத்தனூர் பொட்ட கொல்லை கிராமத்தைச் சேர்ந்த நான்காம் வகுப்பு பயிலும் குமார் மகன் கிரிலக்சன் (9), அதே ஊரை சேர்ந்த 4 ஆம் வகுப்பு பயிலும் மகேந்திரன் மகள் நக்ஷத்திரா(9) உள்ளிட்ட 7 குழந்தைகள் காயமடைந்து ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து உடையார்பாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். பள்ளி வேன் கவிழ்ந்த சம்பவம் ஜெயங்கொண்ட பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.