இதையடுத்து அந்த இளம்பெண்ணும், கணவரும் விமலனின் வீட்டுக்கு சென்று தட்டிக்கேட்டனர். அப்போது அவர், 'இந்த பிரச்சினையை விட்டு விடுங்கள். இதை வெளியே சொன்னால் இந்த படத்தை முகநூலில் வெளியிடுவேன்' என மிரட்டினார். அத்துடன் இளம்பெண்ணையும், அவரது கணவரையும் தகாத வார்த்தைகள் பேசி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து இளம்பெண் ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் விமலன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் நோய்: உலக லூபஸ் தினம்