தாஜ்மகால் அருகே உள்ள மசூதி வளாகத்திற்குள் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் 22 வயது இளம்பெண்ணின் சடலம் அரை நிர்வாணமாகவும், உடலில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. மதியம் தொழுகை நடத்துவதற்காக வந்தவர்கள் மசூதி வளாகத்தில் இளம்பெண்ணின் முகம் சிதைந்த நிலையில் சடலம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து அவர்கள் பொலீசாருக்கு தகவல் அளித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இளம்பெண்ணின் சடலத்தை மீட்டு பிரதேச பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.