உத்தரபிரதேச மாநிலம் நொய்டா மேற்குப் பகுதியில் லா ரெசிடென்சியா சொசைட்டி என்ற 16 மாடிக்கட்டிடம் உள்ளது. இங்கு வசித்து வந்தவர் சரிகா(33). இவரது கணவர் வெளிநாட்டில்
வேலை செய்து வருகிறார். இந்நிலையில் தனது 6 மாத கைக்குழந்தையுடன் அவர் 16வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் விசாரணையில் சரிகா நீண்ட நாட்களாக மனஉளைச்சலில் இருந்ததாகவும், அதற்காக சிகிச்சை பெற்றுவந்ததாகவும் அவரது சகோதரர் கூறியுள்ளார். இந்த நிலையில்தான் தனது குழந்தையுடன் 16வது மாடியில் இருந்து குதித்து அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என போலீசார் கூறியுள்ளனர்.