சந்தேகத்தின் பேரில் பெண் எரித்துக் கொலை

1552பார்த்தது
சந்தேகத்தின் பேரில் பெண் எரித்துக் கொலை
பழங்குடியினப் பெண்ணை சந்தேகத்தின் பேரில் உயிருடன் எரித்துக் கொன்ற சம்பவம் அசாமில் நடந்துள்ளது. வடக்கு அஸ்ஸாமின் சோனித்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை இந்த கொடூரம் நடந்துள்ளது. ஒரு பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்த சில பேர் அப்பெண்ணை அடித்து உதைத்து, வீட்டிற்கு தீ வைத்துள்ளனர். இதில் அப்பெண் தீயில் கருதி உயிரிழந்தார். அசாமின் சில பகுதிகளில் 'மந்திரவாதிகள் வேட்டை' என்ற பெயரில் கொலைகள் நடந்து வருகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

தொடர்புடைய செய்தி