மலேசிய நாட்டில் இருந்து டெல்லி விமான நிலையத்திற்கு இந்திய பெண் பயணி ஒருவர் நேற்று வந்துள்ளார். அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த சுங்க அதிகாரிகள் அப்பெண்ணை தனியாக அழைத்துச் சென்று சோதனை செய்தனர். அப்போது அவரது கைப்பையில் விலை உயர்ந்த 671 கிராம் எடை கொண்ட தங்க நகைகள் இருந்தது தெரியவந்தது. உரிய அனுமதி இன்றி கொண்டுவந்த காரணத்தினால் நகைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அப்பெண்ணை கைது செயதனர்.