விருதுநகர் அருகே பட்டம்புதூர் பகுதியைச் சார்ந்தவர் ஆறுமுகம் வயது 55. இவர் எட்டநாயக்கன்பட்டி பகுதியில் முட்டை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் அருகில் உள்ள கிராமத்திற்கு செல்வதற்காக தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது பட்டம்புதூர் விளக்கில் நின்று கொண்டிருந்தபோது அப்பொழுது அந்த வழியாக வந்த பொலிரோ பிக் அப் வாகனத்தை ஓட்டி வந்த நபர் அதிவேகமாகவும் அஜாக்கர் வேகமும் ஓட்டி வந்து ஆறுமுக இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளார் இதில் ஆறுமுகம் காயம் அடைந்த நிலையில் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் இது குறித்து அவருடைய மகன் அளித்த புகாரின் அடிப்படையில் சுலக்கரை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.