ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள யூடியூப் திவ்யா, கார்த்தி, ஆனந்த் ஆகியோர் 2வது முறையாக தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு தள்ளுபடி. மார்ச் 12ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு செய்து போக்சோ நீதிமன்ற நீதிபதி உத்தரவு.
சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக யூடியூப் திவ்யா, கார்த்திக் ஆனந்த், சித்ரா ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆறு பிரிவு களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சித்ரா திவ்யா ஆகிய இருவரும் விருதுநகர் சிறைச்சாலையிலும் கார்த்திக், ஆனந்த் ஆகிய இருவர் மதுரை சிறைச்சாலையிலும் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நீதிமன்ற காவல்
நேற்று பிப். 26 முடிந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நான்கு பேருடைய நீதிமன்ற காவல் நீட்டிப்பதற்காக நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர்
போஸ்கோ நீதிமன்றத்திற்கு கார்த்திக், ஆனந்த் ஆகிய இருவர் மட்டும் காவல்துறையில் அழைத்து வந்தனர். திவ்யா, சித்ரா ஆகிய இருவரும் வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக கலந்து கொண்ட நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி மார்ச். 12ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் திவ்யா, ஆனந்த், கார்த்திக் ஆகிய மூவரின் தங்களுக்கு ஜாமீன் கேட்டு மனுவை தள்ளுபடி செய்து, மனு மீதான விசாரணையை மார்ச் 12 ஆம் தேதிக்கு ஓத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.