சிவகாசி: லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் பிடிப்பட்ட பணம்...

69பார்த்தது
சிவகாசியில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை. ரூபாய் ஒரு லட்சம் ரொக்கம் பறிமுதல்.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஎஸ்பி ராஜு தலைமையிலான போலீசார் சோதனை அலுவலகத்தின் அனைத்து வாயிற் கதவுகளும், ஜன்னல்களும் மூடப்பட்டு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். வாகன ஆய்வாளர் கார்த்திகேயன், புரோக்கர்கள் கோவிந்தன், மாரிசெல்வம் வெங்கடேஷ் பெருமாள், லட்சுமணன், செல்வம் வாகன ஓட்டுநர்கள் என 30க்கும் மேற்பட்டவர்களை அலுவலகத்தினுள் சிறை பிடித்து விசாரணை நடப்பதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் புரோக்களிடம் இருந்து ஒரு லட்சத்து 680 ரூபாய் பறிமுதல் செய்து சுமார் 8 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தி முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். மேலும் புரோக்களிடம் பறிமுதல் செய்த ரொக்க பணத்தை பற்றி தொடர் விசாரணை நடத்தப்படுமென்று லஞ்ச ஒமிப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

டேக்ஸ் :