இராசபாளையம் - Rajapalayam

இராஜபாளையம்: தென்னை, மா மரங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்

இராஜபாளையம் அருகே விளை நிலங்களுக்குள் புகுந்து தென்னை, மா மரங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள். விவசாயிகள் கவலை. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே விளைநிலங்களுக்குள் புகுந்து தென்னை, மா மரங்களை காட்டு யானைகள் சேதப்படுத்தியுள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். ராஜபாளையம் அருகே சுந்திராஜபுரம் பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள புல்லுபத்தி காடு அருகே 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் தென்னை, மா மற்றும் வாழை போன்ற பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து தென்னை, வாழை, மா என 100-க்கும் மேற்பட்ட மரங்களை சேதப்படுத்தியுள்ளது. இதனால் தங்களுக்கு ரூ. 1 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். மாம்பழ சீசன் நேரத்தில் யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து மரங்களை சேதப்படுத்தியுள்ளதால் விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர். எனவே வனவிலங்குகள் விவசாய நிலத்திற்குள் நுழைவதை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீடியோஸ்


விருதுநகர்
Jun 18, 2025, 04:06 IST/இராசபாளையம்
இராசபாளையம்

இராஜபாளையம்: கொலை வழக்கில் சிறுவன் உள்பட 3 பேர் கைது...

Jun 18, 2025, 04:06 IST
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அருகே நடந்த கொலை வழக்கில் சிறுவன் உள்பட 3 பேர் கைது. ராஜபாளையம் அருகே வடக்கு மலையடிப்பட்டி காமராஜர்புரம் பகுதியை சேர்ந்தவர் சோலைராஜன் (வயது 33) ஒலிபெருக்கி வைத்து தொழில் செய்து வந்தார். இவர் அதே பகுதியில் மயானத்திற்கு செல்லும் பாலம் அருகே வெட்டுக்காயங்களுடன் கொலை செய்யப் பட்டு கிடந்தார். இதுகுறித்து வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோக் பாபு தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் இந்த வழக்கு தொடர்பாக மலையடிப்பட்டி காமராஜர்புரத்தை சேர்ந்த முத்துலிங்கம் (22), கோதைநாச்சியார்பு ரத்தைச் சேர்ந்த பெருமாள்சாமி (23), 17 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு முத்துலிங்கம் உள்பட 3 பேர் சேர்ந்து மது அருந்தி விட்டு தகராறில் ஈடுபட்டதாகவும், இதனை சோலைராஜன் கண்டித்ததால் அவர்களுக்குள் முன் விரோதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது இதனால் அவர்கள் 3 பேரும் சேர்ந்து சோலைராஜனை வெட்டிக்கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை