விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அருகே உள்ள பஞ்ச் மார்க்கெட்டில் வடக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் செல்வம் தலைமையில் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள டீ கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டை சஞ்சீவிநாதபுரத்தைச் சேர்ந்த 73 வயதுடைய முதியவர் பால்சாமி என்பவர் லாட்டரி சீட்டு விற்பனை செய்தது தெரிய வந்தது. இராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸார் முதியவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து லாட்டரி சீட்டை பறிமுதல் செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.