மழை நீர் வரத்து கால்வாயை தூர்வர கோரிக்கை

54பார்த்தது
மழை நீர் வரத்து கால்வாயை தூர்வர கோரிக்கை
அருப்புக்கோட்டை பெரிய புளியம்பட்டியில் உள்ள மழை நீர் வரத்து கால்வாய் ஓடையில் பிளாஸ்டிக் கழிவுகளும் குப்பைகளும் தேங்கி காணப்படுகிறது. புளியம்பட்டி காட்டுப் பகுதியில் விழும் மழை நீர் இந்த மழை நீர் வரத்துக்கு கால்வாய் ஓடை வழியாக பெரிய கண்மாயை சென்றடைகிறது. இந்த மழை நீர் வரத்து கால்வாய் ஓடை முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகளும் குப்பைகளும் நிறைந்து காணப்படுவதால் மழை நீர் சீராக செல்லாமல் மழை நேரத்தில் சாலையில் முழுவதும் மழை நீர் தேங்குகிறது. மேலும் ஓடை முழுவதும் குப்பைகளும் கழிவுகளும் தேங்கி காணப்படுவதால் பகுதியில் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது மேலும் பொதுமக்களுக்கு நோய் தொற்று அபாயமும் ஏற்பட்டுள்ளது. ‌ எனவே ஓடையில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளையும் குப்பைகளையும் அப்புறப்படுத்தி மழைநீர் வரத்து கால்வாய் ஓடையை தூர்வாரி மழைநீர் தங்கு தடை இன்றி செல்ல தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி