வாக்குச்சாவடி மையங்களுக்கு பொருட்களை ஒதுக்கீடு செய்யும் பணி

78பார்த்தது
வாக்குச்சாவடி மையங்களுக்கு பொருட்களை ஒதுக்கீடு செய்யும் பணி
அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்கு சாவடி மையங்களுக்கு தேவையான பொருட்களை ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்றது. சுமார் 255 பைகளில் வாக்கு சாவடி மையங்களுக்கு தேவையான பொருட்கள் வைக்கப்பட்டு வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பப்பட உள்ளது. ‌
இந்த பணிகளை மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான ஜெயசீலன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ‌ மேலும் இந்த பணிகளை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வள்ளிக்கண்ணு தாசில்தார் செந்திவேல் ஆகியோர் முன் நின்று துரிதப்படுத்தினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி