விழுப்புரம் அடுத்துள்ள ஐயூர் அகரம் ரயில்வே கேட்டு அருகே நேற்று 50 வயது மதிக்கத்தக்க ஆண் கிடந்தது. இதுகுறித்த தகவலின் பெயரில் விழுப்புரம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டதில், அவரது சட்டைபையில் காரைக்குடியில் இருந்து சென்னை செல்வதற்கான பயணச்சீட்டு இருந்தது. இதன் அடிப்படையில் அவர் ரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.