அனுமதியின்றி சுவர் விளம்பரம் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கும் படி தேர்தல் துறை அறிவுறுத்தியுள்ளது.
அந்த வகையில், புதுச்சேரி அருகேயுள்ள தமிழகப்பகுதியான நாவற்குளம் ஆரோவில் போலீஸ் செக்போஸ்ட் அருகில் அ. தி. மு. க. , சார்பில் இரட்டை இலை சின்னம் அனுமதியின்றி எழுதப்பட்டிருந்தது.
இது குறித்து ஆரோவில் போலீசார் நாவற்குளம் அ. தி. மு. க. , கிளை செயலாளர் மோகன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதேபோல் புதுச்சேரி-திண்டிவனம் சாலையில் ஆரோவில் போலீஸ் நிலையம் எதிரில் உள்ள சுவற்றில் அனுமதியின்றி பானை சின்னம் வரையப்பட்டிருந்தது.
இது தொடர்பாக வி. சி. , பிரமுகர் திலிப்குமார் என்பவர் மீதும், புதுச்சேரி-திண்டிவனம் சாலையில் பாப்பாஞ்சாவடியில் தி. மு. க. , சார்பில் பானை சின்னம் வரையப்பட்டிருந்தது தொடர்பாக கிளை செயலாளர் செல்வராஜ் மீது, ஆரோவில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.