விஜய்- சீமான் கூட்டணி.. புஸ்ஸி ஆனந்த் பதில்

83பார்த்தது
விஜய்- சீமான் கூட்டணி.. புஸ்ஸி ஆனந்த் பதில்
நடிகர் விஜய் உத்தரவின் பேரில் இன்று (மே 28) உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தினர் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம் வழங்கினர். இந்த நிகழ்வை தவெக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்னெடுத்தார். நிகழ்ச்சி முடிந்ததும் அவரிடம், நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி வைப்பீர்களா எனவும், தவெக-வின் முதல் மாநாடு எப்போது என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “இதுபற்றி எல்லாம் முடிவெடுத்து அறிவிக்க வேண்டியவர் தலைவர் விஜய் மட்டுமே! விரைவில் பதில் கிடைக்கும்” என கூறினார்.