கருமான் பிள்ளையார் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா!

78பார்த்தது
கருமான் பிள்ளையார் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா!
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த சோமசமுத்திரம் கிராமத்தில் அமைந்துள்ள கருமான் பிள்ளையார் கோவிலில் சித்திரை மாதம் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு மூலவர் கருமான் பிள்ளையாருக்கு பால், தேன், சந்தனம், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான நறுமண பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் பட்டு வஸ்திரம் அணிவித்து வெட்டி வேர் உள்ளிட்ட பல வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் சோம சமுத்திரம் மற்றும் சுற்றுப்பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகள் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தது.