கோலாட்டம் ஆடி வாக்கு சேகரித்த திமுகவினர்!

2953பார்த்தது
அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி தி. மு. க. வேட்பாளர் எஸ். ஜெகத்ரட்சகன் பொன்னை, வள்ளிமலை, மேல்பாடி, திருவலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அமைச்சர் துரைமுருகன், தி. மு. க. மாவட்ட செயலாளர் ஏ. பி. நந்தகுமார் எம். எல். ஏ. உள்ளிட்டோருடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது ஒட்டனேரி விநாயகர் கோவிலில் சாமி கும்பிடுவதற்கு சென்ற வேட்பாளர் ஜெகத்ரட்சகனுக்கு கிராம பெண்கள் கோலாட்டம் அடித்து, ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அவர்களுடன் வேட்பாளர் ஜெகத்ரட்சகன், நந்தகுமார் எம். எல். ஏ. ஆகியோர் கோலாட்டம் ஆடிவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அமைச்சர் துரைமுருகன் பாலேகுப்பம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே எஸ். ஜெகத்ரட்சகனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பொன்னை ஒட்டனேரி பகுதியில் பெண்கள் கோலாட்டம் ஆடி அவரை வரவேற்றனர். அப்போது வேட்பாளர் ஜெகத்ரட்சகனும் இசைக்கு ஏற்ப கோலாட்டம் ஆடி வாக்கு சேகரித்தார். பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பளித்தனர்.

மேலும், ராணிப்பேட்டை நவல்பூர் பகுதியில் தி. மு. க. வேட்பாளர் எஸ். ஜெகத்ரட்சகனுக்கு ஆதரவாக சுற்றுச்சூழல் அணி மாநில துணை அமைப்பாளர் வினோத் காந்தி துண்டுபிரசுரம் வழங்கி வாக்கு சேகரித்தார்.

மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் எஸ். வினோத், ராணிப் பேட்டை நகரமன்ற தலைவர் சுஜாதா வினோத், நகர செயலாளர் பூங்காவனம், நகர மாணவரணி அமைப்பாளர் பாலாஜி உள்பட பலர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி