
அரக்கோணத்தில் அமருமிடம் திறப்பு விழா
அரக்கோணம் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் மனு கொடுக்க வரும் நபர்கள் மற்றும் அவரது உறவினர்கள் அமர்வதற்காக தனியாக அறை ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த பார்வையாளர்கள் அமரும் அறையை ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார், டி. எஸ். பி ஜாபர் சித்திக் அரக்கோணம் டவுன் இன்ஸ்பெக்டர் தங்க குருநாதன் உடன் இருந்தனர்.