சொகுசு காரில் கடத்தி வரப்பட்ட குட்கா பறிமுதல்!

66பார்த்தது
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா சுங்கச் சாவடியில் விடியற்காலையில் பள்ளிகொண்டா  இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அவ்வழியாக வந்த சொகுசு கார் ஒன்றை நிறுத்தி உள்ளே சோதனை செய்தபோது 8 பிளாஸ்டிக் மூட்டைகளில் குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து காரில் இருந்த தப்பிக்க முயன்ற தம்பதியினர் 2 பேரையும் போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

தொடர்ந்து  விசாரணை அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை, சாலமங்களம் பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் (37) மற்றும் இவரது மனைவி விஜயலட்சுமி (34) என்பதும் தெரிய வந்தது. மேலும் இவர்கள் பெங்களூரில் இருந்து காஞ்சிபுரத்திற்கு சொகுசு காரில் குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை கடத்திச் சென்றதும் தெரிய வந்தது.  

மேலும் இது தொடர்பாக பள்ளிகொண்டா போலீசார் வழக்கு பதிவு செய்து தம்பதி இருவரையும் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி