சிக்கன் கடைக்காரருக்கு கொலை மிரட்டல்

59பார்த்தது
கே வி குப்பம் அருகே பி என் பாளையம் பகுதியை சேர்ந்த வால்டர் என்கிற வினோத் லத்தேரி பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் இவர்கள் இருவரும் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதால் கடந்த ஆண்டு குண்ட சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள். இந்த நிலையில் இருவரும் மது அருந்திவிட்டு லத்தேரி அடுத்த திருமணி பகுதியில் உள்ள ஒரு சிக்கன் பக்கோடா கடையில் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது சிக்கன் கடைக்காரரை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து சிக்கன் கடைக்காரர் லத்தேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அதன் பெயரில் வழக்கு பதிவு செய்த போலீசார் வினோத் மற்றும் சதீஷ்குமார் இருவரையும் கைது செய்தனர்.