உதகை அருகே எருமை மாடுகள் மீது மோதியதால் மலை ரயிலின் ஒரு பெட்டி தடம் புரண்டது. மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை நோக்கி வந்த மலை ரயில் உதகை ரயில் நிலையம் அருகே வந்தபோது தண்டவாளத்தில் நடந்துசென்ற எருமைகள் மீது மோதியது. மலை ரயில் மோதி எருமை உயிரிழந்த நிலையில், மற்றொரு எருமை படுகாயமடைந்தது. மலை ரயில் தடம் புரண்ட இடத்தில் ரயில்வே அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் பயணித்த நிலையில், ரயிலின் ஒரு பெட்டி மட்டும் தடம் புரண்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.