தள்ளுவண்டி கடை இடிப்பு - ஜெயக்குமார் கண்டனம்

82பார்த்தது
தள்ளுவண்டி கடை இடிப்பு - ஜெயக்குமார் கண்டனம்
சென்னை குரோம்பேட்டையில் தள்ளுவண்டி கடையை JCB-யைக் கொண்டு உடைத்த சம்பவத்துக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில், கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கு பாதுகாப்பு தந்து ஆளுங்கட்சி எம்எல்ஏ ஆதரவு. கார்ப்பரேட் குளிர்பான நிறுவனங்களுக்கு பல கோடிகளை தள்ளுபடி செய்து ஆளும் அரசே ஆதரவு. கரும்பு ஜீஸ்-காலை டிபன் கடைக்காரர்களின் தள்ளுவண்டிகளை மட்டும் தகர்த்தெறிவது ஏன்.. ஆணவத்தின் கண் நடக்கும் ஆட்சி அழிவை சந்திக்கதான் போகிறது. அப்போது தான் இந்த இதயமற்ற மனிதர்களுக்கு இல்லதாவனின் வலி புரியும். மீண்டும் அந்த வண்டியை சீர் செய்ய யாரிடம் வட்டிக்கு வாங்குவார் என கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்தி