உத்திரப் பிரதேச மாநிலம் காசியாபாத் இந்திராபுரத்தில் நேற்று (ஜூன் 28) சாலையில் இளம்பெண் ஒருவர் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, சாலையில் அதிவேகமாக வந்த கார் ஒன்று இளம்பெண் மீது மோதியது. இந்த கோர விபத்தில் இளம்பெண் காற்றில் பறந்து கீழே விழுந்தார். தொடர்ந்து, அந்த கார் நிற்காமல் சென்றுவிட்டது. இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.