ட்ராபிக் சிக்னல்களில் திருநங்கைகள் யாசகம் எடுக்க தடை

53பார்த்தது
ட்ராபிக் சிக்னல்களில் திருநங்கைகள் யாசகம் எடுக்க தடை
மகாராஷ்டிரா மாநிலம் புனேவிலுள்ள போக்குவரத்து சிக்னல்களில் திருநங்கைகள் யாசகம் பெற போக்குவரத்து போலீசார் தடை விதித்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. திருநங்கைகள் யாசகம் எடுப்பது பலருக்கும் இடையூறாக இருப்பதாக காவல்துறைக்கு தொடர்ந்து புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் திருநங்கைகள் யாசகம் பெற போலீசார் தடை விதித்துள்ளனர். மேலும் தடையை மீறினால் சிசிடிவி காட்சிகள் மூலம் கண்காணிக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி