திருவண்ணாமலை அருகே கூத்தாண்டவர் திருவிழா.

74பார்த்தது
திருவண்ணாமலை அருகே கூத்தாண்டவர் திருவிழா.
திருவண்ணாமலை மாவட்டம், மங்கலம் அடுத்த வேடந்தவாடி கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ கூத்தாண்டவர் திருக்கோயில். இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் 'கூத்தாண்டவர் திருவிழா' 20 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும்.

அதன்படி, 2024ஆம் ஆண்டு கூத்தாண்டவர் திருவிழா கடந்த மாதம் 5ஆம் தேதி மகாபாரத சொற்பொழிவுடன் தொடங்கி விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்த கூத்தாண்டவர் திருவிழாவிற்காக திருவண்ணாமலை, சென்னை, மும்பை, விழுப்புரம், சேலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து நூற்றுக்கணக்கான திருநங்கைகள் வேடந்தவாடியில் குவிந்து வருகின்றனர்.

19ஆம் நாளான நேற்று திருக்கோயிலில் பெண்கள் பொங்கல் வைத்து ஊர்வலமாக வந்து சாமிக்கு படைத்தல், பெண் அழைப்பு நிகழ்ச்சி, திருநங்கைகளுக்கான தாலி கட்டும் நிகழ்ச்சி, அதனைத்தொடர்ந்து திருநங்கைகளுக்கான அழகி போட்டிகள் விமர்சையாக நடைபெற்றது.

திருநங்கைகளுக்காக நடைபெற்ற இந்த அழகி போட்டியில் ஏராளமான திருநங்கைகள் விதவிதமாக உடை அணிந்து தங்கள் அழகி நடந்து காண்பித்து மக்களைக் கவர்ந்தனர். இந்த அழகி போட்டியில் முதல் மூன்று இடத்தைப் பிடித்த திருநங்கைகள் சென்னையைச் சேர்ந்த பௌர்ணமி முதல் பரிசையும், சேலத்தைச் சேர்ந்த மிதுளா இரண்டாவது பரிசையும், தஞ்சாவூரைச் சேர்ந்த ஜில்லு மூன்றாவது பரிசையும் பெற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி