ஈஷா யோகா மைய ரத யாத்திரை வந்தவாசி வருகை

56பார்த்தது
ஈஷா யோகா மைய ரத யாத்திரை வந்தவாசி வருகை
கோவை ஈஷா யோகா மையத்தில் மாா்ச் 8-ஆம் தேதி மகா சிவராத்திரி விழா நடைபெறவுள்ளது. இதுகுறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த தமிழகம் முழுவதும் ரத யாத்திரை நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக சென்னை மாதவரத்தில் இருந்து புறப்பட்ட ஈஷா யோகா மைய ரத யாத்திரை வந்தவாசிக்கு வருகை தந்தது. மேள தாளம் முழங்க சிவபக்தா்கள் ரதத்துக்கு வரவேற்பு அளித்தனா்.

ஆதியோகி சிலை கொண்ட ஒரு ரதமும், நாயன்மாா்கள் திருமேனி கொண்ட ஒரு ரதமும் ஒன்றன்பின் ஒன்றாக நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது. சுமாா் 50 போ் கொண்ட தென்கைலாய பக்தி பேரவையினா் ரதத்துடன் பாதயாத்திரையாக சென்றனா்.

அப்போது, மகா சிவராத்திரி விழா குறித்த அழைப்பிதழ்கள் துண்டுப் பிரசுரங்களாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

இதைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை ரதம் சேத்துப்பட்டு நோக்கி புறப்பட்டுச் சென்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி