திருவண்ணாமலை: உயா்நிலைப் பள்ளியில் உலகத் தாய்மொழி தின விழா

72பார்த்தது
திருவண்ணாமலை:  உயா்நிலைப் பள்ளியில் உலகத் தாய்மொழி தின விழா
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் உலகத் தாய்மொழி தின விழா நடைபெற்றது. பள்ளியின் (பொ) தலைமை ஆசிரியர் அன்பரசு தலைமை வகித்தார். தமிழ் ஆசிரியர் ப. லட்சுமணன் வரவேற்றார். ஆசிரியர்கள் ராஜா, கோமதி, கோபால், தனலட்சுமி, கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கப்பட்டன. நிறைவில், பள்ளி மாணவ தலைவி பூர்ணிமா நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி