திருமூர்த்தி அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு!

6511பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்தி அணை மூலம் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் மூலம் நான்கு மண்டலங்களாக பாசன நீர் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 4 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்நிலையில் முதலாம் மண்டலத்திற்கான பாசன நீர் திருமூர்த்தி அணையில் இருந்து இன்று திறக்கப்பட்டது. இதன் மூலம் 94,521 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும். இன்று முதல் 31.05.2024ஆம் தேதி வரை உரிய இடைவெளிவிட்டு பாசன நீர் வழங்கப்பட உள்ளது.

திருமூர்த்தி அணையிலிருந்து வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் பிரதான கால்வாயில் திறந்துவிடப்பட்டது. இதன் மூலம் திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை மடத்துக்குளம் திருப்பூர் - பல்லடம், தாராபுரம் மற்றும் காங்கேயம் கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி மற்றும் சூலூர் ஆகிய வட்டங்களில் உள்ள 94,521 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. தண்ணீரை திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் திறந்துவைத்தார்.

செயற்பொறியாளர் மகேந்திரன், காஞ்சித்துரை, உதவி பொறியாளர்கள் மாரிமுத்து, ஜெயக்குமார், முத்துசாமி மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். திருமூர்த்தி அணையில் தற்போது அணையின் நீர்மட்டம் மொத்தம் 60 அடி கொள்ளளவில் 55.15 அடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி