உடுமலை அருகே துவக்கப் பள்ளிக்கு கணினி வழங்கல்

1556பார்த்தது
உடுமலை அருகே துவக்கப் பள்ளிக்கு கணினி வழங்கல்
திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியம் இராகல்பாவி, ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளிக்கு உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்கத்தின் வழிகாட்டுதலின் பேரில், பெரிய குமாரபாளையம், வாட்சன் இன்பிரா தனியார் நிறுவனம் மூலம் கணினி வழங்கும் விழா இன்று 6. 3. 2024 நடைபெற்றது. நிகழ்வுக்கு வருகை தந்தவர்களை பள்ளி ஆசிரியர் கண்ணபிரான் வரவேற்று பேசினார். அப்போது கிராமப்புற மாணவர்களிடையே நூலகப் பழக்கத்தை வளர்ப்பதற்காக உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்கம் உடுமலையில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு நூலகம் வழங்கி உள்ளதை குறிப்பிட்டு பேசினார். பள்ளித் தலைமை ஆசிரியர் சாவித்திரி தலைமை தாங்கினார். நிகழ்வில் உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் கணேஷ்குமார், குருசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்த வாட்சன் தனியார் நிறுவனத்தின் மேலாளர் பிரபாகரன் மற்றும் முதுநிலை அலுவலர் பாஸ்கர் ஆகியோர் பள்ளி மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

டேக்ஸ் :