திருப்பூருக்கு கூடுதல் பேருந்து இயக்க வலியுறுத்தல்

51பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை போக்குவரத்து கழகத்தின் சார்பில் கிராமம் மற்றும் தொலைதூர வழித்தடங்களில் நூற்றுக்கு அதிகமான பேருந்துகளை இயக்கப்பட்டு வருகின்றன திருப்பூர் மற்றும் கோவை உட்பட தொழில் நகரங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சென்று வருகின்றனர் இந்த நிலையில் உடுமலை திருப்பூர் இடையிலான பஸ் போக்குவரத்து இரவு 10. 25 மணி வரை மட்டுமே இருப்பதால் பயணிகள் அவதிக்குள்ளாய் வருகின்றனர் திருப்பூர் செல்லும் வழித்தடத்தில் பல்லடம் மற்றும் குடிமங்கலம் கோட்டமங்கலம் உட்பட பல்வேறு கிராமப்புற மக்கள் தொலைதூர பேருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர் எனவே பயணிகள் சிரமத்தை தவிர்க்கவும் கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில் திருப்பூர் செல்லும் பயணிகள் பயன்பெறும் வகையில் விரைவில் திருப்பூருக்கு கூடுதலாக பேருந்துகள் இயக்க வேண்டுமென பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.