உடுமலை தாலுக்கா அலுவலகம் முன்பு பிச்சை எடுக்கும் போராட்டம்!

6293பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள ஊராட்சி இந்திரா நகர் பகுதியில் தட்சிணாமூர்த்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளராக உள்ளார். இந் நிலையில் பட்டா மாறுதல் செய்ய வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் விண்ணப்பம் செய்து இருந்தார். இந்நிலையில் தினமும் அதிகாரிகள் தட்சிணாமூர்த்தியை அலைக்கழித்தாக கூறப்படும் நிலையில் அலுவலகத்திற்கு நேற்று நேரில் வந்து கேட்டபோது அலுவலகத்தில் ஓய்வு பெற்ற நபர் ஒருவர் விண்ணப்பத்தை தூக்கி எறிந்தாக கூறப்படுகிறது.

ஆத்திரம் அடைந்த தட்சிணாமூர்த்தி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு துண்டு விரித்து பட்டா மாறுதல் செய்ய வருவாய்த் துறையினருக்கு லஞ்சம் கொடுக்க பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சம்பவ இடத்துக்கு வருவாய்த் துறையினர் விரைவில் பட்டா மாறுதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் கூறியதால் தற்காலிகமாக போராட்டம் கைவிடப்பட்டது.

வருவாய்த்துறையினர் கூறும் பொழுது, தற்சமயம் தமிழக முழுவதும் கோரிக்கைகளை வலியுறுத்தி வரு வாய்த்துறையினர் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்திலும் 20 பலர் வேலைக்கு வரவில்லை இதனால் காலதாமதம் ஏற்பட்டுள்ளது எனவே பணிபுரியும் அதிகாரிகளை வைத்து கள ஆய்வு மேற்கொண்டு பட்டா மாறுதல் தரப்படும் என தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி