பெதப்பம்பட்டியில் விவசாய தொழிலாளர் ஆர்ப்பாட்டம்!

259பார்த்தது
பெதப்பம்பட்டியில் விவசாய தொழிலாளர் ஆர்ப்பாட்டம்!
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த பெதப்பம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் குடிமங்கலம் ஒன்றிய குழு சார்பில் ஒன்றியத்தலைவர் வலுப்பூரான் தலைமையில் நடைபெற்றது. கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் பஞ்சலிங்கம் உரையாற்றினார். ஒன்றிய செயலாளர் தம்புராஜ், கமிட்டி உறுப்பினர்கள் ஆறுமுகம், ஒன்றிய பொருளாளர் பழனிச்சாமி, கமிட்டி உறுப்பினர்கள் சிவக்குமார் மணியன் ஆகியோர் உரையாற்றினார்கள்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றியத்தலைவர் சுந்தர்ராஜ் ஒன்றிய செயலாளர் ஸ்ரீதர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் சசிகலா ஆகியோர் வாழ்த்திப் பேசினர். கமிட்டி உறுப்பினர் முருகன்நன்றியுரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு வட்டார வளர்ச்சி அலுவலரை சந்தித்து மனு கொடுத்தனர்.
இதில் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :