நீதிமன்ற பணிகளை புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டம்

85பார்த்தது
மத்திய அரசு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தையும் இந்திய சாட்சிய சட்டத்தையும் இந்திய தண்டனைச் சட்டம் ஆகியவற்றின் பெயர்களை சமஸ்கிருத மொழியிலும் இந்தி மொழியிலும் மாற்றம் செய்த மக்கள் விரோத ஒன்றிய அரசை கண்டித்து திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு திருப்பூர் பார் அசோசியேஷன் தலைவர். கே. என். சுப்பிரமணியம் தலைமையில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளைப் புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட வழக்கறிஞர்கள் மத்திய அரசு ஆண்டாண்டு காலமாக இருக்கக்கூடிய வழக்கறிஞர்களின் சட்டத்தை திருத்தம் செய்வதை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அட்வகேட் அசோசியேசன் தலைவர் பூபேஷ் திருப்பூர் மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சுப்புராஜ் உள்ளிட்ட ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி