திருப்பூர் மாவட்டம் பூமலூர் ஊராட்சி -கோகுல்கார்டன் பகுதி யைச் சேர்ந்தவர் முருகானந்தராஜ் (வயது 50). இவருடைய மனைவி வசந்தி (49). முருகானந்தராஜ் நேற்று மாலை 3 மணிக்கு தனது ஸ்கூட்டரில் மங்கலம் அருகே உள்ள பூமலூர் பிரிவு பகுதியில் இருந்து பூமலூர் நோக்கி சென்றுகொண்டிருந் தார். அப்போது முருகானந்தராஜ் நிலைதடுமாறி ஸ்கூட்டருடன் சாலையோர முட்புதருக்குள் விழுந்தார்.
இதில் பலத்த காயமடைந்த முருகானந்தராஜ் சம்பவ இடத்தி லேயே பலியானார். இது குறித்து மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்