தாராபுரம்: அமராவதி அணை தூர்வார வேண்டும் பாசன விவசாயிகள் மனு!

63பார்த்தது
திருப்பூர் மாவட்டம் தாராபுரம்: உடுமலை அருகே உள்ள அமராவதி அணையை தூர்வார வேண்டும் என பாசன சங்க விவசாயிகள் பொதுமக்கள் தாராபுரம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் செயற்பொறியாளர் கோபி இடத்தில் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சிக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் ஈசன் உழவர் உழைப்பாளர் கட்சி மாவட்ட செயலாளர் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


பழைய ஆயக்கட்டு பாசன சங்கம் 16 சங்கமம் புதிய ஆயகட்டு பாசன சங்கம் 28 சங்கங்களும் ஒன்றிணைந்து தனித்தனியாக மனுவை செயற்பொறியாளரிடம் கொடுத்தனர் மேலும் குடிமராமத்து பணிகளை பாசன சங்க விவசாயிகளுக்கே வழங்க வேண்டும் என கோரிக்கை மனுவையும் கொடுத்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி